”8 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை”.. விஜயபாஸ்கர் உறுதி

Arun Prasath

செவ்வாய், 10 மார்ச் 2020 (12:35 IST)
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர் உட்பட அவருடன் பழகிய நபர்கள் மொத்தம் 8 பேருக்கு கொரோனா பாதிப்பில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி.

இந்தியாவில் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ள நிலையில், கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சுகாதாரத்துறை கொரோனா பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 7 பேர் உட்பட 8 பேரிடம் நடந்த பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்