23 மதுபானக்கடைகளுக்கு உரிமம் ரத்து – மாவட்ட ஆட்சியர் அதிரடி!

புதன், 15 ஏப்ரல் 2020 (08:15 IST)
புதுச்சேரியில் தடையை மீறி கள்ளத்தனமாக மதுபானம் விற்ற 23 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. ஆனால் பாண்டிச்சேரியில் கள்ளத்தனமாக மதுபானங்கள் பல மடங்கு விலை உயர்த்தி விற்கப்பட்டு வருகின்றன. இது சம்மந்தமாக வந்த புகார்களை அடுத்து அதுபோல விற்பனை செய்த கடைகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டன.

ஆனால் அப்படி சீல் வைக்கப்பட்ட கடைகளில் இருந்தும் மதுபானங்களை திருட்டுத்தனமாக எடுத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக மாவட்ட ஆட்சியர் அருணுக்குப் புகார் வந்தது. இதையடுத்து அவர் காவல்துறையினருடன் இணைந்து நடத்திய சோதனையில் தடையை மீறி மதுபானம் விற்பனை செய்த 23 கடைகளின் உரிமத்தை ரத்து செய்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்