மீண்டும் அட்டூழியம் செய்யும் இலங்கை கடற்படை.. இன்று 21 தமிழ்நாட்டு மீனவர்கள்கைது ..!

Siva

ஞாயிறு, 17 மார்ச் 2024 (07:34 IST)
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து அட்டூழியம் செய்வது தொடர்கதை ஆகி வரும் நிலையில் இதற்கு மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுத்து இந்த கைது நடவடிக்கைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று பல ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் அவ்வப்போது தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி கைது செய்யப்பட்டு வரும் நிலையில் இது ஒரு தொடர்கதை ஆகவே மாறி வருகிறது. இந்த நிலையில் இன்று ராமேஸ்வரத்தில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 21 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் மீனவர்களின் இரண்டு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததால் 21 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக விளக்கம் அளித்துள்ள கடற்படை அவர்களிடம் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகள் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்