வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத சில உணவு பொருட்கள்...!!

சில உணவுப்பொருட்களை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்த்து விடுவது உடலுக்கு மிகவும் நல்லது. அவை  என்னவென்று பார்க்கலாம்.
சோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து, அதனால் குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
 
தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதற்கு அதில் உள்ள ஆசிட் தான் முக்கிய காரணம். இந்த ஆசிட்டானது இரைப்பையில் சுரக்கும் ஆசிட்டுடன் இணைந்து, அதனால் கரைய முடியாத ஜெல்லை உருவாக்கி, அதனால் வயிற்றில் கற்களைக் கூட  உருவாக்கும்.
 
ஆல்கஹாலை காலையில் வெறும் வயிற்றில் எடுப்பதால், அதில் உள்ள சேர்மங்கள், வயிற்றுப் படலத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். இப்படியே நீடித்தால், வயிற்றுப்படலம் அரிக்கப்பட்டு, மிகுந்த அபாயத்திற்கு உள்ளாகக்கூடும்.
 
காரமான உணவுகளை எப்போதுமே வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது. அப்படியே உட்கொண்டால், வயிற்றில் உள்ள அமிலத்துடன் காரம்  சேர்ந்து, வயிற்றில் கடுமையான எரிச்சலை ஏற்படுத்துவதோடு, பிடிப்புக்களையும் ஏற்படுத்தும்.
 
தயிரில் என்னதான் நல்ல பாக்டீரியா இருந்தாலும் இதனை காலையில் வெறும் வயிற்றில் எடுப்பது சிறந்தது அல்ல. தயிரில் உள்ள நல்ல  பாக்டீரியாவானது வயிற்றுப் படலத்துடன் சேர்ந்து வினைபுரிந்து உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.
 
வாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகம் இருப்பதால் இதனை காலையில் வெறும் வெயிற்றில் உட்கொண்டால், மக்னீசியம் உடலில் அதிகரித்து கால்சியம் மற்றும் மக்னீசியத்தில் ஏற்றத்தாழ்வுகல் ஏற்படக்கூடும். எனவே என்காரணம் கொண்டும் வாழப்பழத்தை வெறும் வயிற்றில்  சாப்பிடாதீர்கள்.
 
காபியை போலவே டீயிலும், காப்ஃபைன் உள்ளதால் இதனை வெறும் வயிற்றில் குடிக்காதீர்கள். சொல்லப்போனால் டீயில் அமிலம் அதிகமாக  உள்ளதால் இதனைக் குடித்த பின் இது வயிற்று படலத்தைப் பாதிக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்