கோலி - அனுஷ்கா செயல் கீழ்த்தரமானது - அர்ஹான் சிங்

ஞாயிறு, 17 ஜூன் 2018 (17:03 IST)
ரோட்டில் குப்பை போட்டவரை திட்டிய அனுஷ்கா ஷர்மாவையும் அதனை படம் பிடித்த விராத் கோலியையும் சம்மந்தப்பட்ட நபர் திட்டித் தீர்த்துள்ளார்.
விராத் கோலியும் அவரது மனைவியும் மும்பையில் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மற்றொரு காரிலிருந்த நபர், கண்ணாடி வழியாக பிளாஸ்டிக் குப்பையை சாலையில் வீசினார். இதனைக்கண்ட அனுஷ்கா ஷர்மா அந்த நபரை குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடுமாறு கூறினார். இதனை அனுஷ்கா ஷர்மாவிற்கு அருகிலிருந்த கோலி படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டார். மேலும் தனது மனைவியின் சமூக உணர்வை கோலி பாராட்டினார். 
 
இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ள சம்மந்தப்பட்ட நபர் அர்ஹான் சிங், நான் காரிலிருந்து குப்பையை வேண்டுமென்று வீசவில்லை. இதற்காக நான் மன்னிப்பு கேட்டும் அனுஷ்கா ஷர்மாவும் கோலியும் என்னை அநாகரிகமாக திட்டி, இதனை படம் பிடித்த கோலி அதனை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
நான் காரிலிருந்து வெளியே போட்ட குப்பையை விட, கோலியும் அனுஷ்காவும் என்னை திட்டி விளம்பரம் தேடிக்கொண்டது தான் படுகுப்பையான விஷயம் என அர்ஹான் சிங் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்