விதவையான பெண்; உதவிய மாற்றுத்திறனாளி! – கிராமத்தினர் நடத்திய கொடூரம்!

வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (14:39 IST)
உத்தர பிரதேசத்தில் கணவனை இழந்த பெண் ஒருவர் வேறு ஆணுடன் தொடர்பில் இருந்ததாக கிராமத்தினர் அப்பெண்ணை மொட்டையடித்து கொடுமை நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் கனோஜ் மாவட்டத்தை சேர்ந்த 37 வயதான பெண் ஒருவரின் கணவர் சில மாதங்களுக்கு முன்பு இறந்துள்ளார். அவரது மறைவிற்கு பிறகு தனியாக வாழ்ந்த பெண்ணுக்கு மாற்றுத்திறனாளி ஒருவர் உதவி செய்து வந்துள்ளார். இதை தவறாக புரிந்து கொண்ட பெண்ணின் உறவினர்கள் கிராமத்து மக்களிடன் முறையிட்டுள்ளனர்.

இதனால் பெண்ணின் உறவினர்களும், கிராம மக்களும் சேர்ந்து அந்த பெண்ணையும், மாற்று திறனாளி மனிதரையும் வலுக்கட்டாயமாக இழுத்து வந்து மொட்டை அடித்துள்ளனர். பிறகு செருப்பு மாலையை அணிவித்து அவர்களை அடித்து ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர். இதுகுறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து பெண்ணின் உறவினர்கள் இருவரை கைது செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்