தேர்தலில் போட்டியிடும் திருநங்கை கடத்தல்...

புதன், 28 நவம்பர் 2018 (12:51 IST)
தெலுங்கானாவில் உள்ள  கோசமகால் தொகுதியில் போட்டியிடும் முதல் வேட்பாளர் திருநங்கையாக அறியப்படும் சந்திரமுகி நேற்று கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சந்திரமுகி ஒரு சிறந்த சமூக சேவகி ஆவார்.மக்கள், குழந்தைகள், திருநங்கைகள் மற்றும் சமூகத்தின் நலனுக்காக குரல் கொடுத்தவர். இவர் தெலுங்கானாவில் உள்ள கோசமகால் தொகுதியில் போட்டியிடுவதை விரும்பாத யாரோ இவரை கடத்திச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
 
சந்திரமுகியின் ஆதரவாளர்கள் இதுகுறித்து போலீஸில் புகார் அளித்துள்ளதால், பஞ்சராஹில்ஸ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர் சந்திரமுகி கடத்தப்பட்ட சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்