சாலையில் கட்டுபாட்டை இழந்து ..அந்தரத்தில் தொங்கிய பேருந்து...

வியாழன், 8 அக்டோபர் 2020 (16:59 IST)
சாலையில் இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளோ வாகனங்களோ எந்த நேரத்தில்  எப்படி விபத்து நேரும் என்பதை யாராலும் கணிக்க முடியாது.

எந்த இடர்ப்பாடுகளும் இல்லாமல் வாகனங்கள் சரியாக இருந்தாலும்கூட எதிரே வரும் வாகனம் அல்லது சாலைக் குண்டும் குழிகள் போன்றவற்றால் பல விபத்துகள் நேரும்.

இதேபோல் தற்போது ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

உத்தராகாண்ட் மாநிலம் முசோரியில் இந்தோ திபெத் எல்லை போலிஸார் பயணம் செய்துகொண்டிருந்த பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

இதில், இந்தப் பேருந்தில் பயணம் செய்த போலீசார் அனைவருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. அனைவரும் காயமின்றி நலமுடன் இருப்பதாகத் தகவல் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்