ஆள்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்...

வியாழன், 28 மே 2020 (23:07 IST)
தெலுங்கானா மாநிலத்தில் சிறுவன் ஒருவன் ஆழ்துளை கிணற்றீல் விழுந்தான். 12 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அவன் மீட்கப்பட்டான்.

தெலுங்கானா மாநிலம்  கேடக் மாவட்டத்தில் உள்ள போச்சம் பள்ளி கிராமத்தில் உள்ள அழ்துளை கிணறு நீரில்லாததால் மூடப்பட்டது.

அங்கு விளையாடிக் கொண்டிருந்த சாய் வரதன் என்ற சிறுவன்  திடீரென்று ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான்.

பின்ன பலரும் முயற்சித்து சிறுவனை மீட்கமுடியாத நிலையில், தீயணைப்புத்துறையின தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்தனர். அதுவரை சிறுவனுக்கு ஆக்ஸிஜன் அனுப்பப்பட்டது. பின்னர், 12 மணிநேர போராட்டத்திற்கு பின் 17 அடி ஆழத்தில் இருந்து சிறுவன் உயிரிழந்த நிலையில் மீட்கபட்டான். அவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக  கூறியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்