தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மருத்துவமனையில் அனுமதி..!

வெள்ளி, 8 டிசம்பர் 2023 (11:16 IST)
தெலுங்கானா மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக தெலுங்கானா மாநிலத்தில் முதலமைச்சராக இருந்தவர் சந்திரசேகர ராவ்.  சமீபத்தில் நடந்த தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து காங்கிரஸ் கட்சியின் ரேவந்த் ரெட்டி முதலமைச்சர் பதவியேற்றார்.  

இந்த நிலையில் இன்று அதிகாலை 2:00 மணி அளவில் திடீரென முதலமைச்சர் முன்னாள் முதலமைச்சர்  ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுவதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.  

இந்த நிலையில் தெலுங்கானா முன்னாள் முதல்வர்  விரைவில் குணமாக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்