எதிர்பார்த்தது பவுண்டரிகள், ஆனால் கிடைத்ததோ நோ பால்களும், வைட்களும்: சசிதரூர் எம்பி

புதன், 10 ஜூலை 2019 (07:52 IST)
பாஜக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் பவுண்டர்களையும் சிக்ஸர்களையும் எதிர்பார்த்தோம். ஆனால் கிடைத்தது  நோ பால்களும், வைட்களும் தான் என காங்கிரஸ் எம்பி சசிதரூர் மத்திய பட்ஜெட் குறித்து கமெண்ட் அளித்துள்ளார்.
 
காங்கிரஸ் எம்பி சசிதரூர், கிரிக்கெட்டில் ஆர்வமுள்ளவர் என்பது அனைவரும் அறிந்ததே. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வரும் இங்கிலாந்து மைதானத்திற்கே சென்று ஓரிரு போட்டிகளை அவர் நேரில் கண்டு ரசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டை கிரிக்கெட்டுடன் ஒப்பிட்டு அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு பின் பாஜக அரசின் முதல் பட்ஜெட்டில் அட்டகாசமான பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் எதிர்பார்த்தோம். ஆனால் இந்த பட்ஜெட்டில் ஸ்ட்ரோக்குகளும், விடுபட்ட கேட்சுகளும், நோ பால்களும், வைட்களும் தான் இருந்தன.


எனவே சுவாரஸ்யம் இல்லாத ஒரு கிரிக்கெட் போட்டியை பார்த்தது போல் இருந்தது இந்த பட்ஜெட் இதனால் பொதுமக்களுக்கு கிடைத்த்து ஏமாற்றமே என்று சசிதரூர் எம்பி கூறினார்.  பட்ஜெட்டையும் கிரிக்கெட்டையும் ஒப்பிட்டு சசிதரூர் தெரிவித்த கருத்துக்கு நெட்டிசன்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர்,

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்