மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்...டெல்லி விவசாயிகள் பிரதிநிதிகள் தகவல்

சனி, 26 டிசம்பர் 2020 (18:14 IST)
மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றியுள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்துப் டெல்லியில் கடும் குளிரிலும் வெயிலும் போராடி வரும் விவசாயிகள் மத்திய அரசுடன் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்கு அரசுடன் பேச்சு நடத்தத் தயாராகவுள்ளதாக விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றியுள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்துப் டெல்லியில் கடும் குளிரிலும் வெயிலும் போராடி வரும் விவசாயிகள் தொடர்ந்து 31 வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்கு அரசுடன் பேச்சு நடத்தத் தயாராகவுள்ளதாக விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே பலகட்டங்களாக மத்திய அரசிற்கும்  விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியும் சுமூக  உடன்பாடு எட்டப்படாததால்  வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்கு அரசுடன் பேச்சு நடத்தத் தயாராகவுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்