பயணிகள் மீது சிறுநீர் கழித்த நபர் கைது

வெள்ளி, 6 அக்டோபர் 2023 (20:49 IST)
உத்தரபிரதேசத்தில் பயணிகள் மீது சிறுநீர் கழித்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு, சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் மீது மதுபோதையில் சக பயணிகள் 2 பேர் மீது சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுபோதையில் சக பயணிகள் 2 பேர் மீது ரிதேஷ் என்ற நபர் சிறுநீர் கழித்துள்ளார்.

இதையடுத்து உடனடியாக அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்து அந்த  நபரை போலீஸில் ஒப்படைத்தனர். அதன்பின்னர் ரயில் சுத்தம் செய்யப்பட்டு, மீண்டும் ரயில் இயக்கப்பட்டதாக தகவல் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்