400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வாய்ப்பில்லை- பிரகாஷ்ராஜ்

Sinoj

திங்கள், 18 மார்ச் 2024 (20:33 IST)
பிரதமர் மோடியின் பேச்சை நடிகர் பிரகாஷ் ராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
 
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார். எனவே நாடு முழுவதும் கடந்த சனிக்கிழமை முதல் தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டது.
 
இந்த நிலையில், பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
 
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட  நிலையில் அனைத்துக் கட்சிகளும் தீவிர  பிரசாரம் மற்றும் வாக்குகள் சேகரிப்பில்  ஈடுபட்டுள்ளன.
 
இந்த நிலையில், வரும் மக்களவை தேர்தலில் பாஜக 370 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்றும் தேசிய ஜன நாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெல்லும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
 
பிரதமர் மோடியின் பேச்சை நடிகர் பிரகாஷ் ராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது:
 
420 மோசடி செய்தவர்கள் 400 தொகுதிகள் பற்றிப் பேசுகிறார்கள். ஜனநாயக நாட்டில் தனியாக ஒரு கட்சி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வாய்ப்பில்லை. இத்தனை சீட்களை நாங்கள் கைப்பற்றுவோம் என்று ஒரு அரசியல் கட்சி கூற முடியாது . இது கூறுவது ஆணவமிக்கது என்று தெரிவித்தார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்