கொரோனா வைரஸை விரட்ட சிறப்பு தீர்வு கண்டுபிடித்தால் பரிசு 1 லட்சம் பரிசு : பிரதமர் மோடி

திங்கள், 16 மார்ச் 2020 (20:37 IST)
கொரோனா வைரஸை விரட்ட சிறப்பு தீர்வு கண்டுபிடித்தால் பரிசு 1 லட்சம் பரிசு : மோடி

சீனாவில் ஹூபே மாகாணத்தில் உள்ள வூஹானில் இருந்து துவங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு பல்வேறு நாடுகளில் கொரொனா வைரஸ் தாக்குதல் அதிகரித்துள்ளது. இரானில் 700க்கும் மேற்பட்டோர் இந்த நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இந்தியாவில் 5200 பேர் மருத்துவர் கண்காணிப்பில் உள்ளனர். 
 
எனவே ஐக்கிய அரபு அமீரகம, கத்தார், ஓமன், குவைத்தில் இருந்து வந்தால் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க சிறந்த தொழில்நுட தீர்வை கண்டுபிடிப்பவருக்கு 1 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
 
கோவிட் -19 க்கான தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளை நிறையப் பேர் பகிர்ந்து வருகின்றனர். கோரோனா வைரஸை கட்டுப்பாடுத்தக் கூடிய சிறப்பு தொழில்நுட்பத் தீர்வை கண்டுபிடித்தால், முதல்பரிசாக ரூ1 லட்சம் , இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரு. 25 ஆயிரம் வழங்கப்படுமென தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்