டெல்லியில் பறவைக்காய்ச்சல் உறுதி; இறந்து விழும் காகங்கள், வாத்துகள்!

திங்கள், 11 ஜனவரி 2021 (10:22 IST)
டெல்லியில் தொடர்ந்து பறவைகள் இறந்து விழுந்த நிலையில் அங்கு பறவைக்காய்ச்சல் பரவியுள்ளது உறுதியாகியுள்ளது.

டெல்லியில் தொடர்ந்து பறவைகள் இறந்து விழும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. நேற்று ஒரே நாளில் டெல்லியில் பல பகுதிகளில் 100க்கும் அதிகமான காகங்கள் இறந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து இறந்த காகங்களின் மாதிரிகள் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

சோதனையில் 10க்கும் மேற்பட்ட காகங்களுக்கு பறவைக்காய்ச்சல் உறுதியாகியுள்ள நிலையில், இன்றும் டெல்லியில் காகங்கள், வாத்துகள் பல இறந்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் சுமார் 9 மாநிலங்களில் இதுவரை பறவைக்காய்ச்சல் உறுதியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்