இந்திய கப்பல்படை வீரர்களுக்கு கொரோனோ பாதிப்பு !

சனி, 18 ஏப்ரல் 2020 (15:20 IST)
இந்தியாவில் கொரோனா வைரஸால் இதுவரை 14,378 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  1992 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 480 பேர்  உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நாட்டு மக்களைக் காப்பாற்ற நாடு முழுவதும் வரும் மே 3 ஆம் தேதி வரை  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,மும்பையில் உள்ள இந்தியக் கப்பற்படை வீரர்கள் 21 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்ட வீரர் ஒருவருடன் தொடர்பில் இருந்த 20 வீரர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்