சய்லெண்டாய் வய்லெண்ட் ஆன கொரோனா: செப். மரணங்கள் உச்சம்!!

செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (13:15 IST)
கடந்த 2 வாரங்களில் மட்டும் உலகிலேயே அதிகளவு உயிரிழப்பு இந்தியாவில் ஏற்பட்டுள்ளது என தகவல்.
 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் 83,809 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 49,30,236 ஆக உயர்ந்துள்ளது.
 
ஒரே நாளில் 1,054 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 80,776 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் 79,292 பேர் ஒரே நாளில் குணமடைந்துள்ள நிலையில் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 38,59,399 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 9,90,061 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இந்நிலையில் தற்போதைய தகவலின் படி கடந்த 2 வாரங்களில் மட்டும் உலகிலேயே அதிகளவு உயிரிழப்பு இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. உயிரிழப்பின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு ஆயிரத்தைக் கடந்து வரும் சூழலில், கடந்த 19 நாட்களில் 20,000 மரணங்கள் இந்தியாவில் நிகழ்ந்துள்ளன என தகவல் வெளியாகியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்