நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு...

வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (16:00 IST)
கடந்தாண்டு கடந்தாண்டு மார்ச் முதல் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இதை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சீன நாட்டிலிருந்து கொரொனா தொற்று பல்வேறு  உலகநாடுகளுக்குப் பரவியது. இதில் தற்போதுவரை  உலகம் முழுவதும் 11 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரொனாவின் உருமாறிய இரண்டாவதுஅலை தற்போது பரவிவருகிறது. சமீபத்தில் கொரொனா தொற்று குறைந்துவருவதுபோல் தெரிந்தாலும் மத்தியபிரதேசம், கேரளாவில் மீண்டும் பாதிப்பு அதிகரித்துள்ளது.

இத்தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றவும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு நாடு முழுவதும் வரும் மார்ச் 31 ஆம் தேதிவரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்