ராமர், கிருஷ்ணர் செய்ததை கோலி செய்யாததால் ஆன்டி இந்தியன்: பாஜக தலைவர் விமர்சனம்!!

செவ்வாய், 19 டிசம்பர் 2017 (21:20 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா திருமணம் இத்தாலியில் நடைபெற்றது. இது தொடர்பாக பாஜக தலைவர் ஒருவர் விமர்சனம் செய்துள்ளார்.
 
உறவினர்களுக்காக டெல்லியில் வரும் 21 ஆம் தேதியும், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சினிமாத்துறை நண்பர்களுக்காக மும்பையில் வரும் 26 ஆம் தேதியும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவிற்கு பல்வேறு தரப்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது விராட் கோலியின் திருமணம் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. அதுவும் அவரது திருமணம் இத்தாலியில் நடந்ததால் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.
 
மத்திய பிரதேச மாநில பாஜக எம்எல்ஏ பன்னாலால் சாக்யா பேசுகையில், விராட் கோலி இந்தியாவில் பணம் சம்பாதிக்கிறார், இங்கு பிரபலமாக உள்ளான். ஆனால் திருமணத்திற்கு மட்டும் இத்தாலி சென்று உள்ளார். 
 
இந்து கடவுள் ராம் மற்றும் கிருஷ்ணா இந்த மண்ணில்தான் திருமணம் செய்துக்கொண்டனர், ஆனால் விராட் கோலி மட்டும் திருமணம் செய்து இத்தாலிக்கு சென்று உள்ளார். அவர் தேசபக்தர் கிடையாது. இது அனுஷ்கா சர்மாவிற்கும் பொருந்தும் என விமர்சித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்