கார் ஓட்டும்போது, தூங்கிய ஓட்டுநர்... புத்திசாலித்தனமாக செயல்பட்ட பெண்மணி !

வியாழன், 5 மார்ச் 2020 (21:07 IST)
கார் ஓட்டும்போது, தூங்கிய ஓட்டுநர்... புத்திசாலித்தனமாக செயல்பட்ட பெண்மணி !

வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்த ஓட்டுநர் திடீரென தூங்கியதால், பயணி ஒருவரே வாகனத்தை இயக்கிய சம்பவம் பெரும் வைரலாகி வருகிறது. 
 
மும்பையில் வசித்து வருபவர் தேஜஸ்வினி திவ்ய நாயக் (280. இவர் கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி புனேவில் இருந்து அந்தேரிக்கு செல்லுவதற்காக வாடகை கார் நிறுவனமான ஊபரை தொடர்ப்பு கொண்டுள்ளார். 
 
வாகன ஓட்டி குறிப்பிட்ட இடத்தில் வந்து தேஜஸ்வினியை  ஏற்றிக்கொண்டார். ஆனால் போகும்போதும் டிரைவர் செல்போனில் பேசிக்கொண்டு,  தூங்கி விழுந்துள்ளார். அப்போது, ஒரு காரின் மீது இடித்துள்ளார். அதனால் பொறுமையிழந்த தேஜஸ்வினி, அவரிடம் இருந்து காரை வாங்கி ஓட்டியுள்ளார். 
 
இதையடுத்து, தேஜஸ்வினி வாகனம் ஓட்டும்போது, ஓட்டுநர் அருகேயுள்ள இருக்கையில் அமர்ந்து தூங்கியுள்ளார். பின்னர், குறிப்பிட்ட நேரத்தில் தேஜஸ்வினி காரை ஓட்டிச் சென்றுள்ளார். 
 
இந்த சம்பவத்தை அவர் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அது வைரல் ஆகி வருகிறது. 
 

thanking god I’m alive right now and I wasn’t asleep when this happened & that I know how to drive.@Uber @Uber_Support @Uber_India I am seething with anger right now. how dare they drive if they’re not well rested? how dare they put anyone else’s life at risk?
part 1 #uber pic.twitter.com/lUUFXpHCQS

— tejaswinniethepooh (@teja_main_hoon_) February 21, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்