தேர்தல் முடிந்ததும் பணம் கொண்டு செல்லலாமா..? அதிரடி ட்விஸ்ட் வைத்த தேர்தல் ஆணையம்

Senthil Velan

திங்கள், 8 ஏப்ரல் 2024 (13:23 IST)
தமிழகத்தில் மக்களவை தேர்தல் முடிந்தாலும், ஜூன் 4 ஆம் தேதி வரை பணம் கொண்டு செல்ல கட்டுப்பாடு தொடரும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
 
நாடாளுமன்ற மக்களவைக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் நான்காம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
 
தமிழகத்தில் வருகிற 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்குப் பிறகு கட்டுப்பாடுகள் தொடருமா என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்தது. இந்நிலையில் தமிழகத்தில் தேர்தல் முடிந்த பின்னரும், பணம் கொண்டு செல்ல கட்டுப்பாடுகள் தொடரும் என்று சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

ALSO READ: விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு..! இடைத்தேர்தல் நடத்தப்படுமா.?
 
மேலும் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட நான்கு கோடி ரூபாய் பணம் தொடர்பாக தேர்தல் சிறப்பு குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், தமிழகத்தில் இதுவரை 208 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்