10 ஆயிரம் மீ.தொடர் ஓட்டத்தில் புதிய உலக சாதனை படைத்த வீரர்!

வியாழன், 8 அக்டோபர் 2020 (20:01 IST)
ஸ்பெயின் நாட்டில் சர்வதேச தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில்  10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் உகாண்ட வீரர் ஜோசுவா செப்டகி என்பவர்  புதிய சாதனைப் படைத்துள்ளார்.

ஸ்பெயின் நாட்டின்  வேலன்சிய நகரில் உள்ள ஸ்டேடியத்தில் நடைபெற்ற மகளிர் தடகளம் 5 000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில்  லெடிசென்பெட் கிடி பந்தய தொலையை வெறும்  14 நிமிடங்கள் 6.62 வினாடிகளில் கடந்து  உல்கக சாதனை படைத்துள்ளார். பலரும் அவருக்கு அவரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து  நடைபெற்ற 10 மீட்டர் ஆண்களுக்குகான தொடர் ஓட்டத்தில்  உகாண்டா வீரர்  ஜோசுவா செப்டகி 26 நிமிடங்களில் 11.02 பந்தய இலக்கைக் கடந்து உலக சாதனைப் படைத்தார்.

இதற்கு முன் கடந்த 2005 ஆம் ஆண்டில் கெனேசியா பெகேலே( எத்தியோபியா) 26 நிமிடங்களில் 17.53 வினாடிகளில் பந்தய  இலக்கைத் கடந்ததார். இதை தற்போது ஜோசுவா முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்