இந்திய அணி ஆஸ்திரேலியாவை விட சிறந்தது : சொன்னது யார் தெரியுமா...?

சனி, 1 டிசம்பர் 2018 (13:04 IST)
ஆஸ்திரேயாவுக்கு சென்றுள்ள இந்திய அணி டி- 20 , டெஸ்டி மற்றும் ஒரு நாள் தொடரில் பாங்கேற்று விளையாடுகின்ற நிலையில் டி-20 போட்டி சமனில் முடிந்துள்ளது.
இவ்விரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 6 ஆம் தேதி முதல் துவங்குகிறது.
 
இங்கிலாந்துக்கு சென்ற இந்திய அணி வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. எனவே இம்முறை நடக்க இருக்கும் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் கேப்டன் கோலி தலைமையிலான இந்திய அணி தொடரை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில் முன்னாள்  ஆஸ்திரேலிய கிரிக்கெட்  அணி வீரர் ஜோன்ஸ் கூறியுள்ளதாவது:
 
பொதுவாக இந்திய அணியினர் அந்நிய மண்ணில் ஜொலிப்பதில்லை என்ற பேச்சு எழுகிறது.தற்போது ஆஸ்திரேலிய அணியை விட இந்திய அணி வீரர்கள் மூன்று வித போட்டிகளிலும் சிறப்பாக செயல்படுகின்றனர்.
 
இம்முறை இந்திய அணியில்  வேகப்பந்து வீச்சில்  சிறப்பாக செயல்பட்டால் கோப்பை வெல்வதற்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
 
இதை உணர்ந்து இந்திய அணிவீரர்கள் செயல்பட்டால் ஜோன்ஸ் சொல்வது போல நம் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்