ஹர்திக் பாண்ட்யாவை அணியில் இருக்க சொல்லி நாங்கள் கேட்கவில்லை… குஜராத் அணி பயிற்சியாளர் நெஹ்ரா!

vinoth

திங்கள், 18 மார்ச் 2024 (07:16 IST)
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்ட்யா, இப்போது மும்பை இந்தியன்ஸ் அணியால் மீண்டும் டிரேடிங் முறையில் வாங்கப்பட்டு அந்த அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் குஜராத் அணிக்கு புதிய கேப்டனாக இளம் வீரர் ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹர்திக் பாண்ட்யா மும்பை அணிக்கு கேப்டனாக்கப்பட்டது அந்த அணி ரசிகர்களுக்கே பலருக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் குஜராத் அணியின் பயிற்சியாளரான ஆஷிஷ் நெஹ்ரா ஹர்திக் பாண்ட்யா அணி மாறியது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் “ஹர்திக் பாண்ட்யாவை நாங்கள் எங்கள் அணியில் இருக்க சொல்லி கேட்கவில்லை. கிரிக்கெட்டின் தன்மை காலத்துக்கு ஏற்ற மாதிரி மாறிக்கொண்டே வருகிறது. கால்பந்தில் வருவது போல கிரிக்கெட் லீக்குகளிலும் வீரர்கள் இதுபோல அணி மாறும் சம்பவங்கள் நடக்கலாம். வரும் காலங்களில் இது அதிகமாகும்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்