பாதியில் நின்ற மறைந்த நடிகரின் படங்களுக்கு டப்பிங் பேசும் தம்பி!

வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (10:36 IST)
கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஜூன் மாதம் 7ம் தேதி  சார்ஜாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார். இவர் கடந்த 2018ம் ஆண்டு தமிழ் நடிகை மேக்னா ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர் தமிழில் காதல் சொல்ல வந்தேன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பேமஸ் ஆனவர். இந்நிலையில் மனைவி மேக்னா ராஜ் தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

சிரஞ்சீவியின் மறைவு அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாது ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவலையில் ஆழ்த்தியது. இந்நிலையில் கடைசியாக அவர்  நடித்த 'ராஜமார்த்தாண்டா' என்ற படம் பாதியில் நிற்கிறது. அந்த படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேளைகளில் இறங்கியுள்ள படக்குழு சிரஞ்சீவியின் தம்பியும் கன்னட நடிகருமான துருவ் சார்ஜாவிடம் அவரது அண்ணனின் படங்களுக்கு டப்பிங் செய்யுமாறு கேட்டுள்ளனர்.

அதற்கு ஒப்புக்கொண்டு டப்பிங் வேளைகளில் தீவிரமாக இறங்கியுள்ள துருவ் சர்ஜா அண்ணனின் காட்சிகளை பார்த்து மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாக கூறுயுள்ளார். அதனால் தான் டப்பிங் பணிகள் காலதாமதமானதாக கூறி விளக்கம் கொடுத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்