மல்லிகா ஷெராவத் சமீபத்தில் பிரான்ஸ் நாட்டிற்கு சென்றார். அதன்பின், அங்கிருந்து பாரிஸ் சென்றார். அங்கு ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் தனது ஆண் நண்பருடன் அவர் தங்கியிருந்தார். அப்போது, முகமூடி அணிந்த 3 மர்ம நபர்கள் அவர் மீது கண்ணீர் புகை தெளித்து, அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சமீபத்தில்தான், பாரிஸ் நாட்டிற்கு சென்ற அமெரிக்க நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சி பிரபலமும், மாடலுமான கிம் கர்தாஷியனை துப்பாக்கி முனையில் மிரட்டி பல லட்சம் மதிப்புடைய நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற விவகாரம் அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
இந்நிலையில், பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. அவரிடமிருந்து நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டனவா என்பது குறித்து, இதுவரை தாக்குதல் வெளியாகவில்லை.
உடனடியாக மல்லிகா ஷெராவத், அவரச உதவி சேவை பிரிவினருக்கு தகவல் கொடுத்தார். ஆனால், போலீசார் வருவதற்குள் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி விட்டனர்.