வேட்டையன் படம் பார்த்த விஜய் என்ன சொன்னார்?.. வெங்கட்பிரபு சொன்ன தகவல்!

vinoth

ஞாயிறு, 13 அக்டோபர் 2024 (14:41 IST)
ரஜினி நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸானது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையிக், எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவில் வேட்டையன் படம் உருவாகியுள்ளது.

படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸான நிலையில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படம் பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களைக் கூறினர். குறிப்பாக படத்தில் பல இடங்களில் லாஜிக் இல்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. க்ளைமேக்ஸ் காட்சியில் நீதிமன்றத்தில் இருக்கும் ரஜினி உடனடியாக வில்லனின் இடத்துக்கு சென்று மாஸாக உட்கார்ந்திருப்பார். அது எப்படி என்று பலரும் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.

இந்த படத்தை முதல் நாளே தனுஷ், அனிருத், ஐஸ்வர்யா ரஜினி மற்றும் விஜய் உள்ளிட்ட பிரபலங்கள் பார்த்தனர். விஜய், இயக்குனர் வெங்கட்பிரபுவோடு மாஸ்க் அணிந்து வந்து பார்த்தார். இந்நிலையில் படம் பார்த்த விஜய், அதை முழுவதுமாக ரசித்ததாக இயக்குனர் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்