விரைவில் தொடங்குகிறது வடிவேலுவின் அடுத்த படம்!

வெள்ளி, 17 டிசம்பர் 2021 (09:30 IST)
வடிவேலு மெட்டி ஒலி இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் ஒரு படம் நடிப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தார்.

வடிவேலுவின் கம்பேக்குக்காக 10 ஆண்டுகள் ரசிகர்கள் காத்திருந்தனர். இப்போது அடுத்தடுத்து அவர் படங்களில் கமிட் ஆகி வருகிறார். இந்நிலையில் அவரின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான மெட்டி ஒலி திருமுருகன் இயக்கத்தில் அவர் ஒரு படத்தில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகிக் கொண்டு வருகின்றன.

இது சம்மந்தமான பேச்சுவார்த்தை இப்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளதாகவும், நாய்சேகர் படத்தை முடித்ததும் வடிவேலு அந்த படத்தைத் தொடங்குவார் எனவும் சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்