எஸ்.பி.பி.சரண் தயாரித்த சென்னை 28 படம்தான் தமிழில் நியூ ஜெனரேஷன் படங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டது. அதேபோல் உலகத்தரம் வாய்ந்த ஒரு தமிழ் சினிமா என்றால் இவர் தயாரித்த ஆரண்ய காண்டம். எஸ்.பி.பி.சரண் ஒரு படத்தை தயாரிக்கிறார் என்றால் நம்பி பார்க்கலாம் என்ற நம்பிக்கை அனைவரிடமும் உள்ளது.