இந்த மாதம் 20 திரைக்கு வரும் சண்டமாருதம்

திங்கள், 2 பிப்ரவரி 2015 (14:42 IST)
சரத்குமார் முதல்முறையாக கதை எழுதி நடித்து தயாரித்திருக்கும் சண்டமாருதம் இந்த மாதம் 20 -ஆம் தேதி திரைக்கு வருகிறது.

நான்கு வருடங்களுக்குப் பிறகு சரத்குமார் தனி ஹீரோவாக இந்தப் படத்தில் நடித்துள்ளார். இதில் இவருக்கு இரண்டு வேடங்கள். சரத்குமார் கதை எழுத அதற்கு ராஜேஷ் குமார் திரைக்கதை அமைத்துள்ளார். ஏ.வெங்கடேஷ் இயக்கம்.
 
ஓவியா, மீரா நந்தன் என இரு ஹீரோயின்கள். இவர்களுடன் ராதிகா சரத்குமார், தம்பி ராமையா, சிங்கம் புலி, டெல்லி கணேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். ஜேம்ஸ் வசந்தன் இசை.
 
ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் தந்து எடுத்திருக்கும் இந்தப் படத்தை வரும் 20 ஆம் தேதி வெளியிடுகின்றனர்.
 
மேஜிக் பிரேம்ஸ் சார்பில் சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்