நிறைவேறிய தொடர்கனவு… வடிவேலுவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட மாரி செல்வராஜ்!

வெள்ளி, 4 மார்ச் 2022 (17:48 IST)
மாரி செல்வராஜ் வடிவேலுவுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் மாரி செல்வராஜ் கர்ணன் படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.

இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில்  தளத்தில் நடிகர் வடிவேலுவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள மாரி செல்வராஜ் ‘நிறைவேறிய தொடர்கனவு’ என குறிப்பிட்டுள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு வடிவேலு தொடர்ச்சியாக படங்களில் நடிக்க தொடங்கியிருப்பது அவர் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்