ஓடிடியில் வெளியானது மாரி செல்வராஜின் வாழை திரைப்படம்!

vinoth

வெள்ளி, 11 அக்டோபர் 2024 (07:16 IST)
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியான ‘வாழை’ இந்தாண்டின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக அமைந்தது. இந்த படத்தில் கலையரசன், நிக்கிலா விமல், திவ்யா துரைசாமி மற்றும் பல குழந்தை நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, மாரி செல்வராஜ் ஹாட்ஸ்டார் நிறுவனத்தோடு இணைந்து தயாரித்தார்.

இந்த படம் ரசிகர்கள் உணர்ச்சி ரீதியாக உடைந்துவிடும் அளவுக்கு உருவாக்கப்பட்டிருந்தது. இதனால் படம் பார்த்த பலரும் வெளிவரும் அழுதுகொண்டே வெளியே வந்தனர். ரசிகர்களின் பாராட்டு வார்த்தைகளால் படத்துக்கு வரும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே சென்றது. மூன்றாவது வாரத்திலும், கோட் ரிலீஸுக்குப் பின்னரும் கணிசமான தியேட்டர்களில் இந்த படம் ஓடிவருவதே இதன் வெற்றியை கோடிட்டு காட்டுகிறது. இந்த படம் திரையரங்குகள் மூலமாக மட்டும் 35 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படம் வெளியாகி 50 நாட்கள் கழித்து தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனத்தில் இந்த படம் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பு ஓடிடியிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்