மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கும் மோகன் லால் –ஜீத்து ஜோசப் படம்

ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (09:27 IST)
இயக்குனர் ஜீத்து ஜோசப் மற்றும் மோகன் லால் கூட்டணியில் உருவான ராம் திரைப்படம் கிடப்பில் போடப்பட்டது.

மோகன்லால் & ஜூத்து ஜோசப் கூட்டணியில் இணைந்த திருஷ்யம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் இந்தியைத் தவிர மற்ற மொழிகளில் எல்லாம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. அதையடுத்து வெளியான திருஷ்யம் 2 திரைப்படமும் வெற்றி பெற்றது.

இதையடுத்து தொடர்ந்து இந்த கூட்டணி இணையும் படங்களின் மீதான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய ராம் என்ற திரைப்படம் கோவிட் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக இயக்குனர் ஜீத்து ஜோசப் அறிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்