ரன் படத்தின்மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் நடிகை மீரா ஜாஸ்மின். இவர் தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு மொழிப் படங்களில் நடித்துள்ளார். மலையாள படம் ஒன்றிற்காக தேசிய விருதும் பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிபட்ட நடிகையால் ஒரு இயக்குனர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார் என்று தெரியவந்தபோது அனைவருக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது.
கிராமபோன் என்ற படப்பிடிப்பிபோது 3 முறை தேசிய விருது பெற்ற ஆடை வடிவமைப்பாளர் எஸ்.பி.சதீசுடன் சண்டையிட்டு அவர் தேர்வு செய்த ஆடைகளை கிழித்து எறிந்தார். என் இயக்கத்தில் மின்னமின்னிக் கூட்டம் என்ற படமே மீரா இறுதியாக நடித்தது. காரணம் அவர் தனது சகோதரருடன் ஏற்பட்ட மோதல் பிரச்னை அந்த படத்திலும் எதிரொலித்தது. எனவே இனி இவருடன் பணியாற்றபோவதில்லை என அப்படப்பிடிப்பின்போதே முடிவு செய்தேன் என்று தனது வேதனைகளை பகிர்ந்தார்.