நிஜமாகவே செக்ஸ் வைப்பது போல் நடி; கத்திய இயக்குனர்; வெளியேறிய நடிகை

செவ்வாய், 14 ஜூன் 2016 (14:01 IST)
படுக்கையறை காட்சியை ஒன்றை எடுக்கும்போது, நிஜமாகவே செக்ஸ் வைப்பது போல் நடி என்று படத்தின் இயக்குனர் படப்பிடிப்பில் கத்தியதால், கோபத்தில் அழுது கொண்டே நடிகை வெளியேறிய சம்பவம் பாலிவுட்டில் நடந்துள்ளது.


 

 
பாலிவுட் நடிகை சித்ரங்கதா சிங் தற்போது  ‘பாபுமோஷாய் பந்தூக்பாஸ்’ என்ற திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் குஷன் நந்தி என்பவர் இயக்கி வருகிறார்.
 
சமீபத்தில் அந்த படத்தில் இடம் பெறும் ஒரு படுக்கையறை காட்சியை படமாக்கினர். அதில் கதாநாயகி சித்ரங்கதா சிங், கதாநாயகன் நவாஸீத்தின் சித்தின் என்ற கதாநாயகனுடன் நடித்துக் கொண்டிருந்தார்.
 
இயக்குனருக்கு அந்த காட்சி திருப்திகரமாக அமையவில்லை.இதனால், கோபமடைந்த அவர் “என்ன நடிக்கிறீர்கள் சித்ரங்கதா? நவாஸ் மீது ஏறி அமர்ந்து செக்ஸ் கரோ” என்று கத்தியுள்ளார். படப்பிடிப்புக் குழுவினர் அவ்வளவு பேர் அங்கிருக்கும் போது, இயக்குனர் இப்படி செக்ஸ் வைப்பது போல் நடி என்று கத்துகிறாரே என்று கோபமடந்த சித்ரங்கதா, இயக்குனரை எதிர்த்துப் பேசியதுடன் அங்கேயே அழுதுவிட்டார். அதன்பின் படப்பிடிப்பிலிருந்து அவர் வெளியேறி விட்டார். 


 

 
பொதுவாக பாலிவுட் படங்களில் படுக்கையறை காட்சிகள், உதட்டோடு முத்தம் ஆகிய காட்சிகளில் கதாநாயகிகள் தாரளமாகவே நடிப்பார்கள். இருந்தும் அந்த இயக்குனர் தேவையில்லாமல் சித்ரங்கதாவை திட்டினார் என்று பாலிவுட்காரர்கள் கூறுகிறார்கள்.
 
ஆனால், அந்த காட்சியில் சித்ரங்கதா சிங் சரியாக நடிக்கவில்லை. அதனால்தான் இயக்குனர் கோபப்பட்டு அப்படி கத்தினார் என்று படப்பிடிப்புக் குழுவினர் கூறுகிறார்கள்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்