கடல் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்த அரவிந்த் சாமி தனது படங்களை ரொம்பவும் கவனமாக தேர்வு செய்கிறார். மகேஷ் மஞ்சுரேகர் இந்தி, தமிழில் இயக்கும் படத்தில் நடிப்பவர் அடுத்து ஒப்புக் கொண்டது தனி ஒருவன்.
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் சில மாதங்கள் முன்பு தொடங்கியது. ரயிலில் நடக்கும் காட்சிகளை அரங்கு அமைத்து எடுத்தனர். படத்தின் முதல் ஷெட்யூலில் ஜெயம் ரவியும், நயன்தாராவும் நடித்தனர்.