’உலக அளவில் வளர்வதற்கு எல்லா திறமைகளும் இந்திய சினிமா கலைஞர்களுக்கு இருக்கிறது. அதற்கான சுதந்திரமும் இருக்கிறது. ஆனால், இந்திய அளவிலான இந்த வளர்ச்சியே போதும் என்கிற மன நிலை மாறவேண்டும். இந்திய சினிமா உலக அரங்கில் ஜொலிக்கவேண்டும் என ஒவ்வொரு சினிமா கலைஞர்களும் உறுதி எடுத்துக் கொள்ளவேண்டும்’ என்றார் நடிகர் கமலஹாசன்.