விறுவிறுப்பான நிலையில் கேப்டவுன் டெஸ்ட்

புதன், 5 ஜனவரி 2011 (11:28 IST)
கேப்டவுனில் நடைபெறும் இந்திய, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாளான நேற்று தென் ஆப்பிரிக்க தன் இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்துள்ளது.

2 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி ஆட்டம் முடியும் தறுவாயில் ஹர்பஜன் சிங்கின் அபாரமான இரண்டு பந்துகளில் கிரேம் ஸ்மித் விக்கெட்டையும், இரவுக்காவலனாக களமிறங்கிய பால் ஹேரிஸ் விக்கெட்டையும் கைப்பற்றியது.

அல்விரோ பீட்டர்சன் 22 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். இவருடன் ஹஷிம் அம்லா உள்ளார்.

ஸ்மித் 29 ரன்களுக்கும் ஹேரிஸ் ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். முன்னதாக 40 ரன்கள் எடுத்த ஹர்பஜன் பந்து வீச்சில் 3 ஓவர்கள் வீசி 4 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்