தமிழ்நாடு, ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே ஜெய்பூர் சவாய் மான்சிங் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் ரஞ்சி கோப்பை அரையிறுதிப் போட்டி இரண்டாம் நாள் ஆட்டத்திலும் ராஜஸ்தான் அணி ஆதிக்கம் செலுத்தி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 483 ரன்கள் எடுத்துள்ளது.
ஆகாஷ் சோப்ரா 139 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். காயத்தினால் வெளியேறி பிறகு மீண்டும் களமிறங்கிய கனிட்கர் 64 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.
அஷோக் மெனாரியா 88 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.
ஆட்டக்களத்தில் பந்து வீச்சாளர்களுக்கு ஒன்றுமேயில்லை என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.