ஆதி மூலமான ஒரு ஆண் வழியாக தோன்றும் மகன்-பேரன்-கொள்ளுப்பேரன்-எள்ளுப்பேரன் எள்ளுப்பேரனுக்கு மகன் - எள்ளுப்பேரனுக்குப் பேரன் வரையில் ஆதி மூலமான ஒரு ஆணையும் சேர்த்து ஏழு தலைமுறைகள் வருகின்றது. இந்த ஏழு தலைமுறைகளுக்குள் அடங்கும் அத்தனை பங்காளிகளில் யாராவது ஒருவர் இல்லத்தில் ஏற்படும் பிறப்பினாலும் அல்லது இறப்பினாலும் அனைவருக்கும் தீட்டு உண்டாகும்.
தந்தை / கணவன் இறந்தால் - ஒரு வருடம், தாய் / மனைவி இறந்தால் - ஆறு மாதம், பிள்ளைகள் இறந்தால் - ஐந்து மாதம், சகோதரன் , சகோதரி - மூன்று மாதம், தாத்தா / பாட்டி, நெருங்கிய உறவினர்கள் - ஒரு மாதம். இந்த தோஷ காலங்களில் தீர்த்த யாத்திரை, பண்டிகை, போன்றவை விலக்க வேண்டும்.