பாலியல் தொழிலில் 4 லட்சம் குழந்தைகள்

Webdunia

செவ்வாய், 21 ஆகஸ்ட் 2007 (12:57 IST)
ஒரு ஆண்டில் 4 லட்சம் குழந்தைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்று சைல்டு லைன் இயக்குநர் மரிய கமலம் தெரிவித்தார்.

திருச்சி சைல்டு லைன் சாக்சீடு அமைப்பின் ஏழாம் ஆண்டு விழாவில் இயக்குநர் மரிய கமலம் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, இந்தியாவில் ஆண்டிற்கு 44,000 குழந்தைகள் காணாமல் போகிறார்கள். அதில் 22 விழுக்காடு மட்டுமே மீட்கப்படுகிறார்கள்.

ஒரு ஆண்டில் 4 லட்சம் குழந்தைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அதிலும் 1 லட்சம் குழந்தைகள் பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தி தள்ளப்படுகிறார்கள். இவர்களை மீட்பதில் காவல் துறைதான் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று மரிய கமலம் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்