இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மதன் தாயார் தங்கம், ”எனது மகனின் கதி என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை. இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளோம். முதல் அமைச்சரின் தனிப் பிரிவில் மனு அளித்துள்ளோம்.
மதன் கிடைக்க ஊடங்கள் உதவி செய்ய வேண்டும். எனது மகன் எழுதிய கடிதத்தில் யாருக்கும் மிரட்டல் விடுக்கவில்லை. பாரிவேந்தர், ரவி, மதன் ஆகியோரிடையே எழுந்த பணிப் பூசல் காரணமாக மதன் மாயமாகியிருக்கலாம்.