நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்கள் பெற்றோரிடம் இருந்து வீடு, கார், நகைகள், நிலம் வேண்டும் என கேட்டது குறித்து இயக்குனர் வசந்தபாலன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் கோபிநாத் நடத்தும் நீயா நானா நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் மகள்களும், அம்மாக்களும் கலந்து கொண்டனர். இதில் பெண்கள் பெற்றோரிடம் இருந்து வீடு, கார், நகைகள், மாப்பிளை ஹெலிகாப்டரில் வர வேண்டும் போன்ற பல கருத்துகளை தெரிவித்தனர்.