தமிழக அமைச்சர்களுக்கு ஜெயலலிதா புதிய உத்தரவு

வெள்ளி, 27 மே 2016 (10:57 IST)
அதிமுக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழக வாக்காளர்களுக்கு உடனே நன்றி தெரிவிக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 

 
நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் 134 தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றது. இதனையடுத்து, தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். மேலும்,  அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
 
இதனையடுத்து, தேர்தல் வெற்றி பெற்றவர்களும், வெற்றி வாய்ப்பை இழந்தவர்களும் வாக்காளர்களுக்கு உடனே நேரில் சென்று சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்