இன்று முதல் மூன்று நாட்களுக்கு தரிசனத்திற்கு தடை! – திருச்செந்தூர் கோவில் அறிவிப்பு!

வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (08:41 IST)
தமிழகத்தில் பிரபலமான அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் மூன்று நாட்களுக்கு தரிசனத்திற்கு தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக பல காலமாக கோவில்கள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது திறக்கப்பட்டுள்ளன. அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் கோவில் திறக்கப்பட்ட நிலையில் முதலில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் தரிசன நேரம் அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் வார இறுதிகளில் வழிபாட்டு தளங்கள் செல்ல விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது. அதனால் இன்று முதல் ஞாயிற்றுகிழமை வரை மூன்று நாட்களுக்கு கோவிலில் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்