குருமூர்த்தி மாதிரி நான் கோழை இல்லை: ஸ்டாலினை எச்சரித்த சுப்பிரமணியன் சுவாமி

புதன், 29 ஜூன் 2022 (18:53 IST)
குருமூர்த்தி  மாதிரி நான் கோழை இல்லை என்றும் பிராமணர்கள் எல்லோரும் சாப்ட் ஆனவர்கள் இல்லை என்றும் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
 திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ் காந்தி பிராமணர்களை இனப் படுகொலை செய்ய வேண்டும் என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள நிலையில் சுப்பிரமணியன் சாமியின் அவர் மீது வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என கவர்னருக்கு கடிதம் எழுதியுள்ளார் 
 
அந்த கடிதத்தில் பொது அமைதியை கெடுக்கும் வகையில் ராஜீவ் காந்தி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் என்றும் அவர் மீது வழக்கு பதிவு செய்ய நீங்கள் உங்கள் அதிகாரத்தின் அடிப்படையில் அனுமதி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு உள்ளார் 
 
இதனையடுத்து அவர் ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பிராமணர்களிலேயே கடினமானவர்களும் உள்ளனர் என்பதை ராஜீவ் காந்திக்கு தெரிவியுங்கள் ஸ்டாலின் அவர்களே. குருமுர்த்தி போன்று அனைவரும் கோழைகள் அல்ல என்றும் பதிவு செய்துள்ளார். சுப்பிரமணியசாமியின் இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்