கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில் அதிக அளவில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து தேர்தல் ஆணையம் அங்கு தேர்தலை தள்ளி வைத்தது. இங்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும், திமுக சார்பில் கே.சி. பழனிச்சாமியும் போட்டியிடுகின்றனர்.