இந்த நிலையில், இன்று திடீரென தமிழ்நாடு இல்லத்திற்கு வந்த மின்னஞ்சலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறப்பட்டிருந்தது. இதனை அடுத்து, தமிழ்நாடு இல்லத்திலிருந்து பிரமுகர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
மோப்பநாய் உதவியுடன், போலீசார் தமிழ்நாடு இல்லம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் எந்தவிதமான ஆபத்தான பொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனை அடுத்து, இது வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்துள்ளது.