இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரம் தமிழக அரசின் கொள்கை சார்ந்த முடிவு என்ற போதிலும் மனுதரார் கோரிக்கை குறித்து தமிழக அரசு 4 மாதத்துக்குள் பரிசீலனை செய்து உரிய முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.